Tuesday, October 6, 2015

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்!

 


 

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட முடிவில் ராமதாசிடம், பா.ம.க. பா.ஜனதா கூட்டணி நீடிக்குமா? என்று நிருபர்கள் கேட்டனர். 

அதற்கு ராமதாஸ் பதில் அளிக்கையில், ‘பா.ம.க.வின் முதல்–அமைச்சர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை ஏற்று வந்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம்’ என்றார். 4 கட்சி கூட்டணி பற்றி கருத்து கேட்டபோது, இப்போது அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: