Thursday, October 8, 2015

உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த  உழவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. நானும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன். 

2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 05.04.2011 அன்று கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாராயணசாமி நாயுடுவின் நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும். 1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும்’’ என அறிவித்தார். அப்போது தெலுங்குதேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இடதுசாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

உழவர்களால் போற்றப்படும் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யக்கூடாது. நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கவும்,  1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும் அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: