Thursday, May 28, 2015

பாமக தனித்து போட்டி: அன்புமணி ராமதாஸ் பேச்சு

 


சென்னை மதுரவாயலில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,

ஆர்.கே.நகர் தொகுதியில் பாமக போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகம் முடிவு எடுக்கும். வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. மின் வெட்டுக்கும், மின் கட்டண உயர்வுக்கும் திமுக, அதிமுகதான் காரணம். பாமக ஆட்சிக்கு வந்தால் பல நலத்திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை முன்னேற்றுவோம் என்றார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: