Sunday, October 12, 2014

வக்கீல்கள் சமூக நீதி பேரவை சார்பில் நடைபெற்ற வக்கீல்களின் மாநில மாநாடு ( படங்கள் )

 

வக்கீல்கள் சமூக நீதி பேரவை சார்பில் வக்கீல்களின் மாநில மாநாடு சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் இன்று நடந்தது. சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல்பாலு, தலைமை தாங்கினார். தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ஜெயராமன் வரவேற்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அன்புமணி ராமதாஸ் எம்.பி. விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ஊழலுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு மக்களிடம் நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் சில சக்திகள் தீர்ப்பை விமர்சிப்பதோடு நீதிபதியையும் விமர்சிக்கின்றனர். 4 மாநகராட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகளில் கண்டன தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜனநாயகம் தழைப்பதற்கான அடி மரமாக திகழும் நீதித்துறை மீது வெந்நீரை ஊற்றும் இத்தகைய செயல்களை கண்டிக்கிறோம். நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் அனைத்து சக்திகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சென்னை ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும்.

* ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்.

* சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளையை அமைக்க வேண்டும்.

* தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.

* இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நீதிபதிகளை தேர்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே.ராஜன், நடராஜன், தங்கவேல், தணிகாசலம், மூத்த வக்கீல்கள் ஆர்.காந்தி, மாசிலாமணி, ராஜகோபால், தமிழ்நாடு– புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ், தேசிய பிற்படுத்தப்ப ட்டோர் ஆணைய உறுப்பினர் கார் வேந்தன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் தமிழ்மணி, தமிழ்நாடு– புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பரமசிவம், வக்கீல்கள் சரவணன், பாலாஜி, தமிழரசன், சுஜாதா, இந்திராணி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று மாலையில் டாக்டர் ராமதாஸ் நிறைவுரையாற்றுகிறார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: