Friday, June 27, 2014

இந்தியாவில் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்தவேண்டும்: ராமதாஸ்


பாமக கடலூர் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவிற்கு முன்னரே முடிவுகளை தேவைக்கேற்றபடி கட்டுப்பாட்டு கருவி மென்பொருள் மூலம் தலைகீழாக மாற்ற வாய்ப்பிருப்பதாக அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஆய்வு செய்து தெரிவித்துள்ளன.
வளர்ச்சியடைந்த மேலை நாடுகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்த வாக்குச்சீட்டு முறையை பின்பற்றுகின்றனர். எனவே இந்தியாவிலும் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்தவேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: