Wednesday, June 18, 2014

மது தேவையா? வேண்டாமா? என்பதை வலியுறுத்தி பெண்களிடம் வாக்கெடுப்பை பாமக நடத்தும்: ராமதாஸ்



பாமக தலைமைச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்:
சி.பி.எஸ்.இ. கல்வி முறை போன்று தரமான பாடத் திட்டத்தை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், விவசாய பிரச்னைகளுக்காகவும் போராட்டம் நடைபெறும்.
மற்றொன்று மது தேவையா? வேண்டாமா? என்பதை வலியுறுத்தி பெண்களிடம் வாக்கெடுப்பை பாமக நடத்தும். வாக்கெடுப்பின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வாக்குப் படிவத்தில் வாக்களிப்பவரின் கைரேகை பதிவு செய்யப்படும். இதன் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: