Friday, June 27, 2014

23 நாளில் தமிழக மின்வாரியத்திற்கு ரூ.127 கோடி இழப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு



மின்சாரம் வாங்கியதில் கடந்த 23 நாட்களில் ரூ.127 கோடி மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக அரசு மின்பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்குகிறது. தமிழகத்தில் உள்ள காற்றைலை மின் நிலையங்கள் மூலம் போதுமான மின்உற்பத்தி கிடைத்த போதிலும், அவற்றை வாங்காமல், எரிவாயு அனல்மின் நிலையங்களில் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதன் மூலம் தமிழக மின்வாரியத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3.10 பைசாவிற்கு கிடைக்கும் நிலையில், அவற்றை தவிர்த்து, எரிவாயு அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.14க்கு வாங்குகிறது. இதன்படி கடந்த 23 நாட்களில் மின் வாரியத்திற்கு ரூ.127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற நோக்கத்தில் தான் அரசு கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்குகிறது என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: