Thursday, September 19, 2013

மத்திய அரசுக்கு இது தேசிய அவமானம் : ஜி.கே.மணி



சேலம் மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் 3 பேர்  விடுவிக்கப்பட்டனர்.  அவர்களை வரவேற்பதற்காக சென்ற ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர்,  ‘’தமிழகத்தில் பாமகவினர் மீது போலீஸார் தொடர்ந்து பொய் வழக்குகள் தொடர்ந்து வருகின்றனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது.
இலங்கை ராணுவத்திடம் இருந்து தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே நிரந்தரத் தீர்வு கட்சத் தீவை மீட்பது மட்டுமே.
இலங்கைச் சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளைக் கொடியுடன் இலங்கை அரசிடம் சரணடைய இருப்பதாக, காரைக்கால் முதல் ராமேசுவரம் வரையிலான மீனவர் சங்கங்கள் அறிவித்திருப்பது மத்திய அரசுக்கு ஒரு தேசிய அவமானம்.
எனவே, இனியாவது மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களைக் காக்க முன் வர வேண்டும்’’ என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: