Friday, September 13, 2013

நமது சமுதாயத்தை அடக்க நினைக்கிறார்கள் : அன்புமணி ராமதாஸ்



விழுப்புரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடத்தில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும் மாநில இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் பேசியபோது,
’’இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்து 2016 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பா.ம.க. ஆட்சியை பிடிக்க வேண்டும். நமது சமுதாயத்தை அடக்க நினைக்கிறார்கள்.
மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து 8 ஆயிரம் பேர் கைது, 123 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதிகாரிகளே உங்கள் கடமையை உணர்ந்து செயல்படுங்கள். இன்னும் 2 வருடங்கள்தான். அதன் பிறகு எங்கள் ஆட்சி நடக்கும். தமிழகத்தில் மின்சாரம் இல்லை.
சட்டம் ஒழுங்கு சரியில்லை. பா.ம.க.வின் முக்கிய 2 கோரிக்கைகள். பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். அதற்கு முன்பு திருமணம் நடக்க வேண்டுமென்றால் பெற்றோரின் அனுமதி பெற வேண்டும். அடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு. ஒரு சொட்டு சாராயமும் இருக்காது. அனைத்து கடைகளையும்
மூடி விடுவோம். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தனியாக தான் போட்டியிட போகிறோம். யாருடனும் கூட்டணி கிடையாது. 2016-ல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி நடக்கும். இதற்கு ஒவ்வொருவரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’’என்று தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: