Thursday, September 19, 2013

ஜெ., அவதூறு வழக்கு : ராமதாஸ் நேரில் ஆஜராக விலக்கு

அரியலூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக பேசியதாக அம்மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் ராமதாசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இம்மாதம் 24ம் தேதி நேரில் ஆஜராவதற்கு ராமதாஸுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கு விலக்கு அளிக்க கேட்டும், அது தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ் அரியலூர் கோர்ட்டில் ராமதாஸ் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்தார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: