Saturday, September 21, 2013

ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கிறார்: ராமதாஸ் அறிக்கை


டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கை சென்று விசாரணை நடத்திய மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அவரது அறிக்கையை வரும் 25–ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார். இலங்கை இனப்படுகொலைக்கு நீதி வேண்டி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் இது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அதன் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு குழு கலந்து கொள்கிறது. அக்குழுவில் பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர. அருள், புதுவை சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.கே. அனந் தராமன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் நாளை சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் பின்னர் மனித உரிமை ஆணையத்தின் நிர்வாகிகளை சந்தித்து, இலங்கை இனப்படுகொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச உள்ளனர்.
ஜெனிவாவில் கூடியுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட்டத்திலும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று இது பற்றி வலியுறுத்துவார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களையும் மருத்துவர் அன்புமணி சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: