Tuesday, September 18, 2012

ராமதாஸ் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட் டிருப்பதால், அரிசி, காய்கறி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இனி ஆண்டு 6 எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதும் மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கை ஆகும். இதனால் விறகு, கரி போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எரிபொருள் ஆதாரங்களை தேடிச் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர்.

மாநிலங்களவைத் தலைவர், மக்களவைத் தலைவர், மத்திய மந்திரிகள் ஆகியோருக்கு ஆண்டுக்கு 100 முதல் 200 எரிவாயு சிலிண்டர்கள் வரை மானிய விலையில் வழங்கும் அரசு, மக்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் கள்தான் எனக் கட்டுப்பாடு விதிப்பது கண்டிக் கத்தக்கது.

எனவே டீசல் விலை உயர்வு, சயைமல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி போன்ற மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை திரும்பப்பெற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு தொடர் முழக்க போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்திற்கு நான்  தலைமை ஏற்கிறேன். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பொது வேலை நிறுத்தத்திற்கும் பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும். ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் பா.ம.க. வினரும் கலந்து கொள்வார்கள்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: