Saturday, September 1, 2012

சிறை செல்லும் போராட்டம்: ஜி.கே. மணி


மதுக்கடைகளை மூடக்கோரி டிசம்பர் மாதம் சிறைசெல்லும் போராட்டம் நடத்தப்போவதாக, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி சனிக்கிழமை (01.09.2012) மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மதுகுடிப்பது மனிதனை அழிக்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிப்படை, ஆள்கடத்தல், வன்முறை, தீவிரவாதம் போன்றவை மேலோங்க மதுதான் காரணம். எனவே தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியது முதல் இன்று வரை, மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கூறிவருகிறோம். மதுக்கடைகளால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று அரசு கூறுகிறது.

மக்கள் நலன்கருதி மதுவை ஒழிப்பதற்கு மாற்றுத் திட்டத்தை அரசுக்கு சொல்லிவருகிறோம். மதுவை ஒழிக்க வேண்டும், மதுக்கடைகளை மூடவேண்டும் என்று பாட்டாளிமக்கள்கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

டிசம்பர் மாதம் சிறைக்கு செல்லும் போராட்டம் நடைபெறும். மதுரை தானப்பமுதலி தெருவில் உள்ள எஸ்.எம்.எஸ்.மகாலில் வருகிற 4-ந்தேதி மதுஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி, கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அன்று காலை 10மணிக்கு எனது தலைமையில். நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: