Saturday, September 1, 2012

பாராளுமன்றத்தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெறுவோம்: ஜி.கே.மணி நம்பிக்கை

பாராளுமன்றத் தேர்த-ல் 15 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி சனிக்கிழமை (01.09.2012) மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மின்வெட்டால் தொழிற்சாலைகள், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். செயல்படாமல் உள்ள மின்திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தக் கூடாது.

மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்தியஅரசு தடுத்திடவேண்டும். கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும்.

கிரானைட் முறைகேடுகளில் அனைத்து உண்மைகளையும் கண்டறிய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் குப்கைள் மலைபோல் குவிந்து விடுகின்றன. அதனால் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுக்க சிறப்புநிதி ஒதுக்கி அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்த-ல் தனித்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆட்சி மாற்றம் தேவை என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். பாராளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 15 இடங்களில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: