Sunday, September 16, 2012

திராவிட கட்சிகளை பாமக விரட்டியே தீரும்: டாக்டர் ராமதாஸ்

சென்னை: திராவிட கட்சிகளை விரட்டியடிப்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலை என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெசப்பாக்கத்தில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்று, நல்ல மருத்துவ வசதி, தரமான சாலை வசதி வேண்டும் என்றுதான் பா.ம.க. போராடுகிறது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இலவசங்கள், சினிமா, மது ஆகியவற்றை கொடுத்து தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன. திராவிட கட்சிகளை விரட்டுவதே என் வேலை. அந்த பணியை பா.ம.க.வால் மட்டும்தான் செய்ய முடியும்.
நாங்கள் தமிழகத்தை வளர்ச்சி அடைய செய்துள்ளோம் என்று மார் தட்டும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன். தனித்து போட்டியிட தயாரா நாங்கள் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து விட்டோம் இனிமேல் என்றைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: