Friday, August 5, 2011

இலவசங்களை மக்கள் கேட்டார்களா? ராமதாஸ்

ள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 05.08.2011 அன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ்,


மாணவர்களுக்கு தரமான கல்வி, மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை இலவசமாக வழங்க கொடுக்கவேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பெறும்.


இலவசங்களை மக்கள் கேட்டார்களா?. மதுபான கடைகளை மூடிவிட்டு விவசாயத்துக்கான வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாய உற்பத்தியை பெருக்க எதுவும் ஒதுக்கவில்லை.

ஏனென்றால் இவர்களுக்கு விவசாயம், வேளாண்மை பற்றி ஒன்றும் தெரியாது. நமக்கு இதுபற்றி தெரிந்ததால்தான் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயத்துக்காக தனி பட்ஜெட் போடுகிறோம். நாம் சொல்லும் பட்ஜெட்டை நிறைவேற்றினால் நாடு பெரும் வளர்ச்சி அடையும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: