Sunday, August 14, 2011

ஒருமாதம் நான் சொல்வதை கேட்டால் போதும்: ராமதாஸ்

கும்பகோணம்:""ஒருமாதம் நான் சொல்வதை தமிழக அரசு கேட்டால் போதும்,'' என்று கும்பகோணத்தில் நடந்த தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.அவர் பேசியதாவது:தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகளும், திராவிட கட்சிகள் 44 ஆண்டுகளும் ஆட்சி நடத்தியுள்ளது. ஆனால், தமிழக மக்கள் எதிலும் முன்னேற்றம் அடையவில்லை.தமிழக மக்களுக்கு இலவசமாக பல்பொடி வழங்குவதில் துவங்கி, இன்று ஆட்டுகுட்டியில் வந்து நிற்கிறது.

இந்த இலவசங்களை நாங்கள் எதிர்க்கிறோம்.திராவிட கட்சிகளோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை. இனிமேல் தமிழகத்தில் பா.ம.க., தலைமையில் தான் கூட்டணி அமையும்.தமிழக மக்கள் நலனில் கடந்த அரசுகளுக்கு அக்கறை இல்லை. ஆனால் கல்வி, பொருளாதாரம், ஆகியவற்றில் நாம் வளர்ச்சி பெறவில்லை. ஒருமாதம் நான் சொல்வதை இந்த அரசு கேட்டால் போதும்; நான் கடந்த அரசிடமும் சொன்னேன், இப்போதும் செல்கிறேன்.சமமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம்.

தமிழகத்தில் உள்ள 49 கட்சிகளுக்கு இந்த கொள்கை இல்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்னையான காவிரி பிரச்னைக்கு காரணமாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும்தான்.காவிரி பிரச்னை தொடர்பாக இடைக்காலத் தீர்ப்பு, இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஏன் முயற்சிகள் எடுக்கவில்லை.தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். திராவிட கட்சிகள் காலத்தில் தான் தமிழன் எலிகறி சாப்பிடும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரிசியில் தான் அரசியல் நடத்துகின்றனர்.

தமிழக மக்களுக்கு தரமான கல்வி, விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை கொடுத்தால், அதன்மூலம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார்கள். இனி கடலில் நீர் உள்ள அளவும், வானத்தில் மேகம் உள்ள அளவும் பா.ம.க., யாரோடும் கூட்டு வைக்காது.வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிருபிப்போம். தமிழகத்தில் பா.ம.க.,வால் மட்டுமே கல்வி புரட்சி, தொழில்புரட்சி, விவசாய புரட்சி ஆகியவற்றை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: