Thursday, August 11, 2011

பா.ம.க., : அரசுப் பள்ளிகளில், 60 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும்

சென்னை: ""பக்கத்து மாநிலங்களில் மது விற்பனை நடந்து, தமிழகத்தில் மட்டும் மது விலக்கை அமல்படுத்தினால், கள்ளச்சாராயக் கடத்தலுக்கு வழிவகுக்கும்'' என்று, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.பட்ஜெட் மீது, சட்டசபையில் நடந்த விவாதம்:கலையரசன் - பா.ம.க., : அரசுப் பள்ளிகளில், 60 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும். மதுவால் இளைய தலைமுறை ஒருபுறம் சீரழிவதோடு, ஏழைக் கூலி தொழிலாளர்களும், தங்களது கூலியை இதற்காகச் செலவிடுகின்றனர். கள்ள மது மற்றும் மது கடத்தல் சம்பவங்களும் நடக்கின்றன.அமைச்சர் விஸ்வநாதன் : முந்தைய ஆட்சியில் தான், ஆட்சியாளர்கள் உதவியுடன், மது கடத்தல் நடந்தது. தற்போது, கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க, கடும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பலர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.கலையரசன் : மதுவின் தீமை பற்றி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். பூரண மது விலக்கை அமல்படுத்த, வலியுறுத்தி வருகிறார்.அமைச்சர் விஸ்வநாதன் : மதுவின் தீமையை, இந்த அரசும் உணராமல் இல்லை. மது விலக்கு வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பக்கத்து மாநிலங்களில் மது விலக்கை அமல்படுத்தாமல்,

தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால், தமிழகம் ஒரு தீவு போல ஆகிவிடும். எனவே, அடுத்த மாநிலங்களில் அமல்படுத்தினால் தான், அது முழுமை பெறும். அல்லது கள்ளச் சாராயக் கடத்தலுக்கு வழிவகுக்கும்.கலையரசன் : உண்மையான நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம். ஆனால், முன்பு நிலத்தை விற்றவர்கள், தற்போது அந்த நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், அதிக விலை கிடைக்கும் என்பதற்காக, புகார் கொடுப்பதும் நடக்கிறது. அரிசி கடத்தல் தொடர்கதை ஆகிவிட்டது.
அமைச்சர் செல்லூர் ராஜு: எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், இலவசமாக 20 கிலோ அரிசி இங்கு வழங்கப்படுகிறது. இந்த அரிசி, முந்தைய தி.மு.க., அரசு வழங்கியதை விட, தரமானதாக உள்ளது. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் வாங்குகின்றனர்.ஆரம்பத்தில், கடத்தல் ஒரு சில இடங்களில் நடந்தது. ஆனால், தீவிர கண்காணிப்பு காரணமாகவும், பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்காமல், குண்டர் சட்டம் ÷பான்றவற்றில் கைது செய்யப்பட்டனர். யார் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களது சொத்துக்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கலையரசன் : கடந்த இரண்டு மாதங்களில், 1,519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,877 குவின்டால் கடத்தல் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, 65 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் செல்லூர் ராஜு: எந்த அரசு, இவ்வளவு தூரம் சிறப்பாகச் செயல்பட முடியும். கடந்த ஆட்சியில், வேன், லாரி, கப்பல் என பல வழிகளில் அரிசி கடத்தினர். பெயருக்கு கைது நடவடிக்கைகள் இருந்தன. தற்போது, சரியான அதிகாரிகளைக் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏதாவது ஒரு பகுதியில், அரிசி கடத்தல் நடந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.கலையரசன் : பா.ம.க.,வினர் யாரும், அரிசி கடத்தலில் ஈடுபடவில்லை.அமைச்சர் செல்லூர் ராஜு: பா.ம.க., அரிசி கடத்தியதாகக் கூறவில்லை. கடந்த ஆட்சியில் நிர்வாகிகள் செய்தனர். ஆனால், அவர்களுக்கு அன்றும் துணை நின்றீர்கள். இன்னும் துணை நிற்கிறீர்கள்.கலையரசன் : வேலூரில், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில், 4 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி : யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: