Saturday, March 20, 2010

தமிழக அரசின் பட்ஜெட் கசக்குது-ராமதாஸ்

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் டில் இனிப்பான செய்திகளைவிட, கசப்பே மேலோங்கியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

11வது ஐந்தாண்டுத் திட்டம் விரைவில் நிறைவடையப் போகிறது. மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிற மக்கள் யாரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதே இந்த ஐந்தாண்டு திட்டக் காலங்களில் முக்கியமானது.
ஆனால், 6 கோடி மக்களில் மூன்றரை கோடி பேர் இன்னமும் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வேட்டி, ஒரு சேலை கூட வாங்க முடியாத நிலையில் வறுமையில் உள்ளனர் என்று தமிழக முதல்வரே கூறியுள்ளார்.

இந்த வறுமைக்கு, மது வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதுதான் காரணம். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் மது வருமானம் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அப்பாவி மக்களின் வருமானத்தைச் சுரண்டி, அரசு வருமானத்தை பெருக்குவது மக்கள் நல அரசின் இலக்கணமாக இருக்க முடியாது. படிப்படியாக மதுவிலக்கு என்ற கொள்கையை அறிவித்துள்ள அரசு, அதற்கான முயற்சியை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: