Wednesday, February 24, 2010

பென்னாகரத்தில் வெற்றியை உறுதி செய்ய தமிழக பாமகவினர் திரண்டு வர வேண்டும்- ராமதாஸ்

சென்னை: பென்னாகரத்தில் பாமகவின் வெற்றியை உறுதி செய்ய தமிழகம் முழுவதும் உள்ள பாமகவினர் திரண்டு வந்து பென்னாகரத்தில் பணியாற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து பாமகவினருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

பா.ம.க., மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைருக்கும் தனது கையெழுத்திட்டு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார் ராமதாஸ்.

அதில், பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க., வெற்றிபெறும் என எதிரணியினரும் ஒப்புக் கொள்ளக் கூடிய நிலை உருவாகியுள்ளது. நாம் வெற்றி பெற கட்சியில் உள்ள ஒவ்வொருவரின் உழைப்பும் தேவைப்படுகிறது.

எனவே கட்சியில், வன்னியர் சங்கத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பென்னாகரம் வர வேண்டும் என்று கோரியுள்ளார் ராமதாஸ்.
குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில் பென்னாகரம்..

இடைத் தேர்தல் வந்தும் கூட பென்னாகரத்திற்கு விடிவு காலம் பிறக்கவில்லை. அங்கு குடிநீர்ப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது.

ஒரு மாதமாக ஆளுங்கட்சியினர், அரசின் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றியும், பல இடங்களில் அரசு சார்பில் போர்வெல் போட்டும், தண்ணீர் கிடைக்காத நிலையே உள்ளது.

இதனால், எதிர்க்கட்சியினர், குடிநீர் பிரச்னை குறித்து பெரிதாக பிரசாரம் செய்கின்றனர். திமுகவினரோ, இதோ வந்து விட்டது ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். வந்தவுடன் குடிநீர்ப் பிரச்சினை ஓய்ந்து விடும் என்று கூறி பிரசாரம் செய்கின்றனர்.

குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அங்கு தங்கியிருக்கும் அரசியல் கட்சியினரும் கூட அவதிப்படுவதைப் பார்க்க முடிகிறது.

பிரசாரத்திற்கு வந்த இடத்தில் குடிக்க தண்ணீர் கேட்டு பொதுமக்களை அணுகினால் பொசுக்கி விடுவார்களோ என்ற பயத்தில், குடிநீர் லாரிகளை வரவழைத்து தொண்டர்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனவாம் அரசியல் கட்சிகள்.

குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும், ஒகனேக்கலுக்கும் போய் குளித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: