Monday, February 22, 2010

பென்னாகரம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி-பாமக-அதிமுக புகார்

தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நீடிப்பதாக அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர்.

இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அமுதா கூட்டினார்.

இக்கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அதிமுக பிரதிநிதியான தர்மபுரி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் விஜயன் கூறுகையில், பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் பட்டியலில் 42,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டும்,​​ குறைவான வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.​ ​

மதிமுக பிரதிநிதியான அக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் கூறுகையில், ஒகேனக்கல் செல்லும் பாதையில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும்.​ தேர்தலுக்கு முன் 10 நாள்கள் ஒகேனக்கலுக்கு செல்ல யாரையும் அனுமதிக்கக் கூடாது.​ இதனால் தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவது,​​ சட்ட ஒழுங்கு பிரச்னைகள் தடுக்கப்படும் என்றார்.

பாமக பிரதிநிதி பண்ருட்டி எம்.எல்.ஏ.​ வேல்முருகன் ​கூறுகையில், பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை அனைத்து கட்சிகளின் மத்தியில் சோதனை செய்தும்,​​ நிபுணர்களை வைத்து ஆய்வு செய்த பின்னரே தேர்தலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வாக்காளர்கள் பட்டியலில் நீக்கப்பட்டுள்ள 23,000 பேரை சேர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.​ ​

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி​யான​ அரூர் எம்எல்ஏ​​ டில்லிபாபு கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறி பென்னாகரம் தொகுதியில் புதிய பஸ்கள்,​​ சாலை வசதிகள் உள்ளிட்ட ​நலத் திட்டங்களை திமுகவினர் வழங்கி வருகின்றனர்.​ வாக்காளர்கள் சேர்க்கை ரகசியமாக முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

திமுக பரிதிநிதியான முன்னாள் அமைச்சர் செல்வகணபதி,
வாக்கா​ளர்​கள் பட்டியல் வெளியீட்டில் எவ்வித சந்தேகத்திற்கும்,​​ புகாருக்கும் இடமில்லை.​ வாக்காளர்கள் சேர்ப்பில் விசாரணை முழுமையாக நடைபெற்றுள்ளது என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: