Sunday, February 21, 2010

சென்னையில் பாமக வழக்கறிஞர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை யில் இன்று காலை வழக்கறிஞர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

சென்னை அயனாவரம் பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வன்னிய சம்பத். 49 வயதான இவர் பாமகவின் அமைப்புச் செயலாளராகவும் இருந்து வந்தார். எழும்பூர் கோர்ட்டில் வக்கீலாகப் பணியாற்றி வந்தார்.

இன்று காலை தனது மகன் சஞ்சீவை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அயனாவரம் சவுத் ஈஸ்ட் காலனி அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது அவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளியது.

படுகாயமடைந்து விழுந்த சம்பத்தை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அங்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.

மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில், பட்டப் பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: