Friday, February 19, 2010

2 வாரங்களுக்கு கேரளாவுக்கு எந்தப் பொருளும் போகாமல் நிறுத்த ராமதாஸ் கோரிக்கை

உடுமலை: பாம்பாறு, முல்லைப் பெரியாறு அணை என தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் குந்தகம் விளைவித்து வரும் கேரளாவுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு 2 வாரங்களுக்கு எந்தப் பொருளையும் அனுப்பாமல் தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் இன்று உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு மாநில எல்லை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்தால், அப்போது கேரளாவுக்கு சென்ற தமிழக பகுதிகள் மீட்கப்படும். அப்போது நீர் பங்கீட்டு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கேரள அரசை தண்ணீருக்கு மட்டும் தான் தமிழகம் நம்புகிறது. ஆனால் கேரளா பால், அரிசி என பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு தமிழகத்தை நம்பி இருக்கிறது. எனவே தமிழக மக்கள் பொறுமையாக இருக்கிறார்கள் என்பதை ஆதாயமாக எடுத்துக் கொண்டு பொறுமையை சோதித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், முல்லைப் பெரியாறு, பாம்பாறு என தமிழகத்தின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது கேரளா.

எனவே கேரளாவுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில், 2 வாரத்திற்கு தமிழகத்திலிருந்து எந்தப் பொருளும் செல்லாமல் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வரத் துடிக்கும் மத்திய அமைச்சர் கபில் சிபல், பிடி கத்திரிக்காய்க்குத் தடை விதிக்க மறுக்கும் ஜெய்ராம் ரமேஷ் ஆகிய இருவரையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: