Wednesday, February 24, 2010

தென் மாவட்டங்களின் கோரிக்கைகள் ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிப்பு- ராமதாஸ்

சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட் டை பொதுவாக வரவேற்றுள்ளனர் தமிழக அரசியல் கட்சியினர். இருப்பினும், தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை மமதா பானர்ஜி புறக்கணித்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு - ராமதாஸ்

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டும் தமிழகத்தை பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. ரயில்வே துறையில் பா.ம.க.வை சேர்ந்த அமைச்சர் இப்போது பொறுப்பில் இல்லை என்பது பளிச்சென்று தெரிகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகளின் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. அதை குறைப்பதற்கு புதிய ரயில்கள் விடப்பட வேண்டும் என்றும், நெல்லை-சென்னைக்கு இடையே பகல்நேர அதிவிரைவு ரயில் விடப்பட வேண்டும் என்றும் தென்மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

புறநகர் பயணிகளுக்கான ரயில் சேவையிலும், கொல்கத்தா, மும்பை பெருநகரங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள முக்கியத்துவம் சென்னைக்கு இல்லை. சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனமயமாக்கப்படும், அங்கு புதிய உற்பத்தி பிரிவு தொடங்கப்படும், ரயில்வே துறை வேலைக்கான தேர்வினை அந்தந்த மாநில மொழிகளில் எழுதலாம் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: