Tuesday, February 9, 2010

நாடு முழுவதும் சிகரெட் விற்பனை வீழ்ச்சி: மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்தது பலன்

இந்தியாவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை, வீழ்ச்சி கண்டுள்ளது. ஓராண்டில் இப்பொருட்கள் 8 சதவீத விற்பனை குறைந்திருக்கிறது. புற்றுநோயால் தாக்கப்பட்ட இந்திய ஆண்களில் 56.4 சதவீதமும், பெண்களில் 44.9 சதவீதம் பேரும் புகையிலையால் பாதிக்கப் பட்டவர்கள்.

உலகிலேயே அதிகமாக வாய் புற்றுநோயால் பாதிக் கப்பட்டவர்கள், இந்தியாவில் தான் இருக்கின்றனர்.இந்த புகையிலைப் பொருட் களை உட்கொள்வதற்காக, இந்தியாவில் உள்ள தனி மனிதர்கள் கொஞ்ச நஞ்சமில்லை. ஆண்டுதோறும் 44 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவழிக்கின்றனர்.தேசிய குடும்ப நல ஆய்வு மையத்தின் சர்வே படி, இந்தியாவில் உள்ள ஆண்களில் 46.5 சதவீதமும், பெண்களில் 13.8 சதவீதமும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள். இவர்களில் 30 சதவீதம் ஆண்களும், 2.5 சதவீதம் பெண்களும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள். பொது இடங்களில் புகை பிடிப் பதை வரவேற்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, 94 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 97 சதவீதம் பேர், சிகரெட் பாக்கெட்களில், புகைப்பதால் விளையும் ஆபத்துகளை விளக்கும் படங்களை பிரசுரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

இதனால் துணிந்த மத்திய அரசு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்த போது, பொது இடங்களில் புகைப்பதைத் தடுக்கும் சட்டத்தையும், புகையிலைப் பொருட்களின் முகப்பு அட்டைகளில், 40 சதவீதம் அளவுக்கு, அவற்றால் ஏற்படும் பாதிப்புகளின் படத்தை அச்சிட வேண்டும் என உத்தரவிட்டது.இதற்கான பலனும் கிடைத்துள்ளது. இந்தியாவில் சிகரெட் விற்பனை, தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டு, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல், மத்திய அரசின் புகையில்லா தேசம் சட்டம் அமலுக்கு வந்தது. 2004ம் ஆண்டு, இதே போல அறிவிக்கப்பட்ட சட்டத்தை விட, கடுமையாக இந்த முறை அமலாக்கம் இருந்தது.இதன் மூலம், பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது.மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, கை மேல் பலன் கிடைத்தது.

பார்களில், உணவு விடுதிகளில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது. வெளியே சென்று சிகரெட் பிடிக்க வேண்டியிருந்ததால், தொடர்ந்து புகைப்பவர்கள், எண்ணிக்கையை குறைத்தனர். சிறுவர்களுக்கு சிகரெட் விற்பது குறைந்தது.கடந்த 2007ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2008ம் ஆண்டு, இந்தியாவின் ஒட்டு மொத்த சிகரெட் விற்பனை வளர்ச்சி, 8 சதவீதம் குறைந்துள்ளது.எக்சைஸ் வரி அதிகரிப்பால், "பில்டர்' இல்லாத சிகரெட்களின் உற்பத்தியை ஐ.டி.சி., நிறுவனம் நிறுத்தியுள்ளது. "விற்பனை குறைந்தாலும், விலை அதிகரிப்பு மற்றும் அதிக விலை சிகரெட்களின் விற்பனையால், பெரிய அளவில் நிதியிழப்பு ஏற்படவில்லை' என்கின்றனர் ஐ.டி.சி., அதிகாரிகள்.தேசிய அளவில், ஏற்கனவே உள்ள நடைமுறைகளும் விதிகளும் கடுமையாகச் செய்து அமலாக்கம் தொடர்ந்தால், சிகரெட் விற்பனையை பெருமளவில் தொடர்ந்து குறைக்க முடியும்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: