Wednesday, November 18, 2015

மழை, வெள்ள நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

 
மழை, வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மழை, வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கியுள்ள 500 கோடி ரூபாய் நிதி உதவி போதாது. கடலூர் மாட்டத்திற்கு மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி தேவைப்படும். ஆகையால் வெள்ள பாதிப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அது விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும். 

வெள்ள பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்வார்கள். அரசு பணம் வழங்குவதற்கு முன்பாக தேர்தல் வந்துவிடும். அப்போது என்ன செய்வார்கள் என்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். அது தேர்தலுக்காக கொடுப்பதுபோல் இருக்கும். மேலும் ஆயிரம், இரண்டாயிரம் கொடுக்கிறோம். ஓட்டு போடுங்கள் என்பார்கள். அதற்குதான் பயன்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதி கிடைக்காது. ஆகவே வெள்ள பாதிப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதோடு, அது விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: