Thursday, June 25, 2015

இந்திராவின் எமர்ஜென்சிக்கும் ஜெ. ஆட்சிக்கும் வேறுபாடு இல்லை: ராமதாஸ்

சென்னை: 40 ஆண்டுகாலத்துக்கு முன்னர் இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சிக்கும் தற்போது தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வரும் ஆட்சிக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய ஜனநாயக வரலாற்றில் வெறுக்கத்தக்க அத்தியாயம் ஒன்று உண்டென்றால், அது 1975ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கி 21 மாதங்கள் நீடித்த நெருக்கடி நிலை தான். ஒட்டுமொத்த இந்தியாவையும் 21 மாதங்கள் மட்டுமே நெருக்கடி நிலை ஆட்டிப்படைத்த சூழலில், தமிழக மக்கள் மட்டும் 50 மாதங்களாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையால் அவதிப்படுகின்றனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: