Monday, June 22, 2015

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேச்சு



தகவல் உரிமை ஆணையத்துக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய ராமதாஸ், 

ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அவரது கட்சிக்கு வேண்டப்பட்டவர்களே ஆணையர்களாக நியமிக்கப்படுள்ளனர். இப்படி இருக்கும்போது, எப்படி நியாயமான தகவல் வெளியாகும். ஆணையரை நியமிக்க முதல்வர், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் ஆலோசித்து ஆணையரை நியமிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அத்தகைய சூழ்நிலை இல்லாத காரணத்தினால் அந்த குழுவே கூடவில்லை. 

ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன் என்று அறிவித்துவிட்டு அரை மணி நேரம் மட்டும் பெயரளவுக்கு உழைத்துவிட்டு விமானங்களில் பறந்து சென்று மக்களை காண்பவர்களுக்கு மக்கள் நலனை காக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எப்படி எடுப்பார்கள்.

தற்போதைய சூழலில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது. கல்வி, போக்குவரத்து என அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது. மின்சார துறையில் நிலவும் ஊழல் குறித்து கேட்ட கேள்விக்கு இதுவரை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனால் பதில் கூற முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில், தகவல் ஆணையத்தை வெளிப்படை தன்மையோடு அணுகினால் மட்டுமே நியாயமான, நேர்மையான நிர்வாகத்தை தமிழகத்தில் உருவாக்க முடியும். இவ்வாறு பேசினார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: