Saturday, March 14, 2015

மூத்த காங்கிரஸ் தலைவர் கிள்ளிவளவன் மறைவு... ராமதாஸ் இரங்கல்

பாமக நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:''காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் தி.சு. கிள்ளிவளவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (13.03.2015) காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய இரு தலைவர்களுடனும் நெருங்கி பழகியவர்; இணைந்து பணியாற்றியவர். எனக்கும் நல்ல நண்பராக திகழ்ந்தார். ஊழல், பணத்தாசை ஆகியவற்றின் நிழல் கூட தம்மை நெருங்காமல் பார்த்துக் கொண்டவர்.இளம் வயதில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இறுதி வரை அரசியலில் இருந்தாலும் எளிமை ஒன்றையே தனது அடையாளமாகக் கொண்டவர். சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழக அரசியலின் அனைத்து தகவல்களையும் தமது விரல் நுனியில் வைத்திருந்தவர். அவரது மறைவு தமிழக அரசியல் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ''
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: