Monday, October 8, 2012

பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்க்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் 08.10. 2012 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருவதால் காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் அனுபவித்து வரும் எண்ணிலடங்காத பிரச்சனைகளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் நீங்கள் பிறப்பித்த ஆணைக்கு பணிய மறுத்துவிட்ட கர்நாடக அரசு, இந்தப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்கும் வரை, தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட  திறந்து விடவில்லை. உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்குப் பிறகுதான் காவிரி பாசன மாவட்டங்களின் சம்பா பாசனத்திற்காக, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இரவு முதல், காவிரியில் வினாடிக்கு 9000 கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.

இந்த தண்ணீர் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு போதுமனதல்ல என்ற நிலையில், இந்த அளவுக்குக் கூட தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இத்தகைய சூழலில், கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நீங்கள் இன்று தில்லியில் கூட்டியிருக்கிறீர்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள், தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பொய்யான தகவல்களை கொடுத்து உங்களை தவறாக வழிநடத்தக்கூடும். அவர்களின் இது போன்ற நியாயமற்ற கோரிக்கைகளுக்கு நீங்கள் உடன்படக்கூடாது. மாறாக காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நாளான அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பிறகும், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம்  தண்ணீர் திறந்து விடுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தல் ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: