Saturday, October 20, 2012

உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்


மழை நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பருவ மழை துவங்கி கடந்த மூன்று நாட்களிலேயே இதுவரை வரலாறு காணாத அளவில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பருவ மழைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், கடந்த மூன்று நாட்களிலேயே சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதையும் காண முடிகிறது.

பல பகுதிகளில் கழிவு நீர் குழாய்கள் உடைந்து குடிநீர் குழாயுடன் கழிவு நீர் கலந்து பெரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மூன்று நாட்களுக்கே இப்படி என்றால், இன்னும் பருவ மழை தீவிரமடைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

சென்னை மாநகரமே வெள்ளக்காடாக ஆகி விடும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து, இதுவரை உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: