Friday, October 5, 2012

ஓய்வூதியம்-காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் சீர்திருத்தத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதியத் துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, ஓய்வூதிய நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்வது உள்ளிட்ட சீர்த் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு வசதியாக ஓய்வூதிய சட்டத்திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் கோடிக் கணக்கான பணியாளர்களின் சமூக பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியிருக்கிறது. அரசு ஊழியர்கள் தங்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் பணிக்காலம் முழுவதும் சேமிக்கும் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது ஆகும்.
அண்மைக்காலங்களாக பங்கு சந்தைகள் சூதாட்டக் களங்களாக மாறிவரும் நிலையில், அரசு ஊழியர்களின் பணத்தை அவற்றில் முதலீடு செய்தால், அவை எந்த அளவுக்கு திரும்ப கிடைக்கும் எனபதற்கு உத்தரவாதம் எதும் இல்லை. மேலைநாடுகளில் பங்குசந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த மாத ஊதியதாரர்களின் பணம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் காணாமல் போய்விட்டது.

இதற்குப் பிறகும் பணியாளர்களின் ஓய்வூதிய நிதியில் ஒரு பகுதியை பங்குசந்தையில் முதலீடு செய்ய அரசு தீர்மானித்திருப்பது விளக்கை பிடித்துக்கொண்டு கிணற்றில் குதிக்கும் செயலாகவே அமையும். அதேபோல் ஓய்வூதியத் துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதும், காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டின் உச்சவரம்பை 26 விழுக் காட்டிலிருந்து 49 சதவீதம் ஆக உயர்த்துவதற்கு அனுமதித் திருப்பதும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதிகபட்சமாக 49 சதவீதம் அளவுக்கு மட்டுமே அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுவதால், காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாக அதிகாரம் இந்திய நிறுவனங்களிடம் தான் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்திய சந்தைகளுக்குள் அமைதியாக நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், பின்னர் படிப்படியாக தங்களின் ஆக்டபஸ் கரங்களால் ஒட்டுமொத்த சந்தையையும் வளைத்து வசப்படுத்தி வருவதை கிழக்கிந்திய கம்பெனி காலத்திலிருந்தே பார்த்து வருகிறோம்.

ஓய்வூதியத்துறை, காப்பீட்டுத் துறை சீர்த்திருத்தங்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால், கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலை யில், திடீரென இதற்கான மசோதாக்களை நாடாளு மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதன் பின்னணியில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மாத ஊதியதாரர்கள் மற்றும் பொது மக்களின் நலனுக்கு எதிரான ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் துறை சீர்திருத்தங்களை மத்திய

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: