Thursday, October 25, 2012

நாடார்களை இழிவுபடுத்தி மலையாள நாயர்களை உயர்த்தி எழுதுவதா.. ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டமாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வ குடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருபது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடபட்டுள்ள 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 168வது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கபட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடபட்டிருக்கிறது.
இது மிகபெரிய வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில், தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டமாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வ குடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருபது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
அதே பாடத்தின் இன்னொரு பகுதியில், நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிந்ததாகவும், மேலாடை அணிவதற்காக நாடார் சமுதாய பெண்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும் கூறப்பட்டிக்கிறது. இதுவும் வரலாற்றுத் திரிபாகும்.
கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டிந்த போது, அதை எதிர்த்தும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்தும் 1836ம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டங்களை நடத்தியவர் அய்யா வைகுந்தர் ஆவார்.
எனவே நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அய்யா வைகுந்தரின் விடுதலைப் போராட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையிலும் இந்த பாடம் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படியான 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் உள்ள பிழைகள் உடனடியாக திருத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்திய அய்யா வைகுந்தரின் வாழ்க்கை வரலாற்றை மத்திய மற்றும் மாநிலப் பாடத்திட்ட பாடநூல்களில் ஒரு பாடமாக சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: