Sunday, January 1, 2012

புயல் பாதிப்பு இழப்பீடு: ராமதாஸ் கோரிக்கை

’’புயல் காரணமாக தமிழகத்தில் ரூ 1000 கோடி அளவுக்கும், புதுவையில் 2000 கோடி அளவுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி மத்தியக் குழுவை வரவழைத்து புயல் சேதத்தை மதிப்பிடவும்,







அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து இழப்பீடு பெறவும் தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மத்திய அரசின் நிதி வருவதற்காக காத்திருக்காமல் தமிழக அரசு அதன் சொந்த நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

புதுவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் புயல் பாதித்த பகுதிகளில் அதேபோல வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: