Wednesday, December 28, 2011

இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்: ராமதாஸ்

சேலம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில், நிரந்த தீர்வு ஏற்பட, இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இதை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த பணிக்கர் என்னும் கேரள அதிகாரியின் சதியால் இடுக்கி மாவட்டம் கேரளாவுடன் இணைக்கப்பட்டதாக கூறினார். முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமெனில், இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்தும் மக்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருவதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: