Saturday, January 7, 2012

தேர்தல் அறிக்கையில் சொன்னபடி செய்யலை: ராமதாஸ்

சென்னை : "கரும்பு விலையை டன்னுக்கு, 100 ரூபாய் மட்டும் உயர்த்திருப்பது, விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் கரும்பு அரவை பருவம் துவங்கி, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை, தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு டன் கரும்புக்கு போக்குவரத்து செலவுடன் சேர்த்து, 2,100 ரூபாய் கொள் முதல் விலை வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு, தமிழக உழவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், டன்னுக்கு வெறும், 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
உழவர்களின் நலனைக் காப்பதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது என்று கூறிக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா, மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் கரும்பு கொள்முதல் விலையைக் குறைத்து நிர்ணயித்திருப்பது நியாயமல்ல. இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: