Monday, January 2, 2012

கடலூர் மாவட்ட புயல் பாதிப்பை இன்று பார்வையிடுகிறார் ராமதாஸ்

சென்னை: கடலூரில் தானே புயல் தாக்கிய பகுதிகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பார்வையிடுகிறார். பொதுமக்களையும், விவசாயிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில்,

தானே புயல் தாக்கியதால் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படாததால் மக்கள் குடிநீர், பால், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பார்வையிட உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று கூறியுள்ளார் மணி.

கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா விவசாயிகள் மிகப் பெரிய சேதத்தையும், பாதிப்பையும் சந்தித்து பெரும் கவலையிலும், அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.

அவர்களையும் டாக்டர் ராமதாஸ் சந்திப்பார் என்று தெரிகிறது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: