Thursday, January 12, 2012

புதுவைக்கு இணையாக தமிழகத்திலும் இழப்பீடு: ராமதாஸ்

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதுவைக்கு இணையாக தமிழகத்திலும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஒருவாரத்துக்குள் தனது கோரிக்கையை ஏற்று செயல்படுத்தாவிட்டால் 20 ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.



இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:



தமிழகத்திலும் புதுவையிலும் ஒருமாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் புதுவையில் அறிவிக்கப்பட்டதைவிட தமிழகத்தில் குறைந்த அளவிலேயே இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை புதுவை அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ரூ 10 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. வாழைக்கு புதுவையில் ரூ 35 ஆயிரம் வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் ரூ 7500 மட்டுமே வழங்கப்படுகிறது.



எனவே புதுவையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இணையான இழப்பீட்டுத் தொகையை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட உழவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும். ஒருவாரத்துக்குள் தனது கோரிக்கையை ஏற்று செயல்படுத்தாவிட்டால் 20 ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்.



இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: