Wednesday, December 28, 2011

அதிமுக, திமுகவால் சீரழிந்துவிட்டோம்: நிர்வாகிகள் மத்தியில் ராமதாஸ் கண்ணீர்

சேலம்: திராவிடக் கட்சிகளால் நாம் சீரழிந்துவிட்டோம் என்று கூறி பாமக தலைவர் ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கண்ணீர் விட்டார்.

பாமகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,

அதிமுக, திமுகவுடன் மாறி, மாறி கூட்டணி வைத்து தான் சீரழிந்துவிட்டோம். இது தவிர போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் மாறி, மாறி ஓடி நீங்கள் தான் முதல்வர், நீங்கள் தான் முதல்வர் என்று அவர்களுக்கு காவடி எடுத்து தான் இந்த நிலையில் உள்ளோம். அதனால் இனிமேல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. 25, 25 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தது போக தற்போது இந்த அவல நிலையில் உள்ளோம்.

இனி வரும் காலத்தில் பாமகவின் தனித்தன்மையைக் காப்போம் என்று கூறி கண்ணீர்விட்டார்.

இதைப் பார்த்த நிர்வாகிகள் தலைவர் இவ்வளவு வேதனைப்படுகிறாரா என்று உருகிவிட்டனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: