Tuesday, December 20, 2011

ஜி.கே.மணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு பிரச்சனையை தொடர்ந்து கேரளாவில் தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழக வாகனங்கள் நொறுக்கப்படுவதை கண்டித்தும் பா.ம.க. சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி- திருச்சூர் ரோடு திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தங்கவேல் பாண்டியன், மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணப்பன், ராமு ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் பொள்ளாச்சி நகர பா.ம.க. செயலாளர் பாலாஜி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் முருகேசன், பசுமை தாயகம் வெங்கடேஷ், சக்கரவர்த்தி, மன்னூர் ராமர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: