Wednesday, September 22, 2010

''நாம் வாழ, நாம் ஆள வேண்டும்'': இதுதான் நமது தாரக மந்திரம்-ராமதாஸ்

கும்மிடிப்பூண்டி & சேத்தியாதோப்பு: நாம் வாழ, நாம் ஆள வேண்டும். இதுதான் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு வன்னியர் சமுதாய இளைஞனும் ஜெபிக்க வேண்டு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கும்மிடிப்பூண்டியில் பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நிறைவு நாளில் அவர் பேசுகையில்,

ஆறரை கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னிய இனம க்கள் மேம்பாடு அடையாமல் வாழ்ந்து வருகின்றனர்.

தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி வகை செய்யும்.

சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடுதான்.

வன்னியர்கள் மற்றும் தலித்துகள் இணைந்தால் தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால், திராவிடக் கட்சிகள் சூழ்ச்சி செய்து இவ்விரு இனத்தவரிடையே பிரிவினைகளை உருவாக்கி வருகின்றன.

இந்தியாவிலேயே அதிகமான விதவைகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு காரணமான டாஸ்மாக் கடைகள் தான்.

பாமக ஆட்சிக்கு வந்தால் அவை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார்.

''நாம் வாழ, நாம் ஆள வேண்டும்'':

முன்னதாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் திருமண விழாவில் பேசிய ராமதாஸ்,

வன்னியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள கல்விக் கோவிலில், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டக் கல்லூரி துவங்கப்படும். வன்னியர் பிள்ளைகள் அனைவரும் அங்கு படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ்சாக வேண்டும்.

நமது சமுதாய மக்கள் அனைவரும் திருப்பதி, சபரிமலை மற்றும் முருகன் கோவிலுக்கெல்லாம் போகிறீர்கள். வன்னியர்களுக்காக கட்டப்பட்டுள்ள கல்விக் கோவிலுக்கு அனைவரும் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து பார்க்க வேண்டும்.

இந்த சமூகம் வாழ வேண்டும் என்றால், நாம் ஆள வேண்டும்.
இரண்டு கோடி மக்களை வைத்துக் கொண்டு, எனக்கு 40 இடம் கொடுங்கள்; 50 இடம் கொடுங்கள் என, யாரிடமாவது கையேந்தும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இன்னும் யாரிடம் கையேந்துவது. பல கட்சிகளை வளர்த்து விட்டுக் கொண்டே இருந்தால், நாம் ஆட்சிக்கு வரவே முடியாது. வன்னியர் அனைவரும் என் பின்னால் வாருங்கள். நான் கை காட்டுபவர்களை ஆதரிக்க வேண்டும். இனியும் மனு கொடுக்கும் ஜாதியாக நாம் இருக்கக் கூடாது. மனு வாங்கும் ஜாதியாக வன்னியர்கள் மாற வேண்டும்.

நாம் வாழ, நாம் ஆள வேண்டும். இதுதான் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு வன்னியர் சமுதாய இளைஞனும் ஜெபிக்க வேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: