Thursday, September 2, 2010

திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும்-திருமாவளவன்

சென்னை: வட மாவட்டங்களில் திமுக கூட்டணி வலிமை பெற பாமக பயன்படும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசியல் அறியாமையால் சில கட்சிகள் அவதூறானப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரின் இலங்கை பயணத்தால் தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படபோவதில்லை.

திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுகின்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு அமையும். மீண்டும் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும்.

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, அதிக அளவு பணத்தைக் கொடுத்து ஆட்களை திரட்டுகிறார்கள். வட மாவட்டங்களில் கூட்டணி வலிமை பெறுவதற்கு பாமக வரவு பயன்படும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: