Monday, February 1, 2016

அதிமுக வக்கீல்களை டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினராகப் போடுவதா.. ராமதாஸ் கடும் பாய்ச்சல்

சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தில் உறுப்பினர்களாக நியமித்ததன் மூலம், அரசு அமைப்பானது அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தேர்வாணையத்தில் 10 உறுப்பினர்களின் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவரும், உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் நேற்று ஓய்வு பெற்றார்
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரோசய்யா உத்தரவின்படி, தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
ஆனால், அவர்கள் அனைவரும் அதிமுகவின் தீவிர உறுப்பினர்கள். இதனால், டிஎன்பிஎஸ்சி அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: