Monday, December 21, 2015

நானே முதல்வர் வேட்பாளர்... பா.ம.க. தலைமையிலேயே கூட்டணி என்பதில் சமரசமே கிடையாது: அன்புமணி

சென்னை: "தாமே முதல்வர் வேட்பாளர்; பா.ம.க.வே தலைமை" என்பதை ஏற்கும் தி.மு.க; அ.தி.மு.க. அல்லாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் எந்த ஒரு சமரசமுமே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தினமணி நாளேட்டுக்கு அன்புமணி நேற்று அளித்த பேட்டி ஒன்றில், மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் எப்படி உங்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் என்ற கேள்விக்கு, "கூட்டணி என்று ஏற்படும்போது அதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. திமுக, அதிமுகவுக்கு மாற்று ஏற்படுத்துவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்" எனக் கூறியதாக இடம்பெற்றிருந்தது.

இதனால் பா.ம.க. தன்னுடைய முதல்வர் வேட்பாளர் நிலைப்பாட்டில் இருந்து சமரசம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை அன்புமணி திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:"கூட்டணி என்று ஏற்படும்போது அதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. திமுக, அதிமுகவுக்கு மாற்று ஏற்படுத்துவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம் என தெரிவித்திருந்ததாக" தினமணி பேட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது முற்றிலும் தவறானது."பேசித் தீர்த்துக் கொள்ளலாம்' எனக் குறிப்பிட்டது எதை? முதல்வர் வேட்பாளர் குறித்த வினாவுக்கு நான் விடையளித்தபோது, இரு விஷயங்களில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தயாராக இல்லை.முதலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.இரண்டாவதாக, முதல்வர் வேட்பாளராக கட்சித் தலைமை என்னை ஒருமனதாக ஏற்கெனவே அறிவித்து, கடந்த 10 மாதங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவரும் நிலையில், அதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ள முடியாது.அதே நேரத்தில் துணை முதல்வர் பதவி, கூட்டணி ஆட்சி ஆகியவற்றுக்கு பாமக தயாராக இருக்கிறது. இது பற்றியெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நான் குறிப்பிட்டேன்.கூட்டணிக்கு நிபந்தனை என்ன? பாமகவின் தலைமையையும், அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றுக் கொள்ளும் அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம் என்று ராமதாஸ் பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதுதான் பாமகவின் உறுதியான நிலைப்பாடு. இதில் எவ்வித மாற்றத்துக்கும், சமரசத்துக்கும் இடமில்லை என உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: