Friday, December 11, 2015

செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்ட விவகாரம்: வழக்கு தொடர பாமக முடிவு

செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது தொடர்பாக பாமக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அக்கட்சியின் இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

சென்னை தியாகராய நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக சார்பில் நலத்திட்ட உதவிகளை அக்கட்சியின் இளைஞரணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தான் சென்னையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிதி போதாது எனவும், மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியும் போதாது என்றும் கூறினார்.

மேலும், வெள்ள பாதிப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அனைத்து கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

தற்போது தமிழக அரசு அமைத்துள்ள சுகாதார முகாம்கள் போதிய அளவில் இல்லை என்பதால் கூடுதலாக முகாம்களை திறக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: