Wednesday, May 4, 2011

பாமக நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுகிறது. இதையொட்டி பல விருதுகளும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கிறது.

விருது பெறுபவர்கள் விவரம்,

அம்பேத்கர் சுடர் விருது - பாமக நிறுவனர் ராமதாஸ்

பெரியார் ஒளி விருது - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்

காமராசர் கதிர் விருது - மூத்த எழுத்தாளர் சோலை

அயோத்திதாசர் ஆதவன் விருது- பவுத்த பெரியார் சுந்தரராசன்(மறைவு)

காயிதே மில்லத் பிறை விருது - பேராசியிரியர் காதர் மைதீன்

செம்மொழி ஞாயிறு விருது - கவிஞர் தணிகைச் செல்வன்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படையின் அத்துமீறல்

அமெரிக்கப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமாவை சுட்டுக் கொன்றது அத்துமீறிய செயலாகும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது அமெரிககாவின் அரச பயங்கரவாதம். இன்னொரு நாட்டில் நுழைந்து அதன் இறையாண்மையில் தலையிடும் அமெரி்க்காவை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: