Monday, May 2, 2011

புதிய பள்ளிக் கட்டணத்தை உடனே வெளியிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை : "நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை உடனே வெளியிட்டு, அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக்கொள்ள சட்டப்படியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்யும் வரை, பள்ளிகளை திறக்க மாட்டோம். சமச்சீர் கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால், அக்கல்வி முறையை, நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளது, அரசுக்கு சவால் விடும் செயலாகும்.


அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்க வேண்டும் என்ற உன்னதநோக்கின், முதல் கட்டமாக தமிழக அரசு சமச்சீர் கல்வியையும், மத்திய அரசு, கல்வி தரும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளன. சமச்சீர் கல்வியில் சில குறைபாடுகள் இருக்கலாம். அதை காலப்போக்கில் களைய வேண்டும்.


ஆனால், அனைவருக்கும் தரமான கல்வி வழங்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டிய தனியார் பள்ளிகள், தங்கள் விருப்பம் போல் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும், சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. தனியார் பள்ளிகளின் இம்முயற்சியை முறியடிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு.


கட்டண உயர்வு கோரி மேல் முறையீடு செய்துள்ள 6,400 பள்ளிகளிடமும் விசாரணை முடிந்துவிட்ட நிலையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை, நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, விரைவில் வெளியிட வேண்டும். அக்கட்டணம், ஏழை மக்களால் செலுத்தப்படும் வகையில் அமைய வேண்டும். இதை தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். ஏற்றுக்கொள்ளாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: