Wednesday, December 29, 2010

தனித்து நிற்பது பாமகவுக்கு ஒன்றும் புதிதல்ல:ராமதாஸ்

திருவள்ளூர்: தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்பது பாமகவுக்கு ஒன்றும் புதிதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,

தமிழக மக்கள் தொகையில் இரண்டரை கோடி பேர் வன்னியர்கள். அவர்கள் அனைவரும் ஒரு அணியாகத் திரண்டு வன்னியர் குலத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க அரும்பாடுபட வேண்டும்.

வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தற்போது தெரிவிக்க விரும்பவில்லை. கூட்டணியே இல்லாமல் தனித்து நிற்பதும் நம் கட்சிக்கு ஒன்றும் புதிதன்று.

ஏற்கனவே, கடநத 81, 91, 96 தேர்தல்களில் தனித்து நின்றோம். முதல் முறை 1 எம்.எல்.ஏவும், 2வது முறை 4 எம்எல்ஏவும் பெற்ற நாம் தற்போது 100 எம்எல்ஏக்களை பெற வேண்டும். இதற்கு இளைஞர்கள் வரும் ஜனவரி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களி்ல் வன்னியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றபோதிலும் பாமக வலுவான நிலையில் உள்ளது. பிற மாவட்டங்களில் இருக்கும் வன்னியர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் நம் பக்கம் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: