Sunday, August 8, 2010

தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்-ராமதாஸ்

பரமக்குடி: தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பரமக்குடி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமூகநீதிக் கட்சியான பா.ம.க.வில் தென் மாவட்டங்களில் நாடார், முக்குலத்தோர், பிள்ளைமார், யாதவர் ஆகிய சமுதாயத்தினருக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி. என்பது பட்டியல் சாதியினர். இதனை பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

அரசு ஆவணங்களில் தேவேந்திரகுலத்தினர் பல்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதனை மாற்றி தேவேந்திரகுலத்தார் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டும். அருந்ததியருக்கு வழங்கப்படுவது போல் தேவேந்திரர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

வைகை மற்றும் தாமிரபரணி ஆற்றில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும்.

பூரண மதுவிலக்கு வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது 13 வயது இளைஞர்களும் குடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலை நீடித்தால் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுக்குள் குடிக்காதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும். இதனால் 34 மாவட்டங்களிலும் மகளிரைத் திரட்டி மது ஒழிப்பு போராட்டம் நடத்தியுள்ளோம்.

கடந்த 3 ஆண்டுகளில் குறைகளை சுட்டிக்காட்டியதால் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டோம். தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: