ராமநாதபுரம்: ஆந்திராவில் உள்ள சித்தூர், தேவிகுளம் பெருமேடு, கர்நாடகத்தில் உள்ள பெங்களூர் போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக பாமக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எதிரான தேர்தல் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கிறது. பணத்துக்கு ஓட்டு என்பதை மக்களிடம் விதைத்து விட்டனர்.
இதனால் தங்கள் தொகுதி எம்எல்ஏ எப்போது இறப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தொகுதி மக்களிடமும் வந்துவிட்டது. எம்எல்ஏக்களுக்கு மாரடைப்பு வராதா என தொகுதி மக்கள் எதிர்பார்க்கும் நிலை வந்துவிட்டது. இது வேதனை அளிக்கிறது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து தலைவர்களும் கூடி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்த முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தேர்தல் கமிஷன் தனது குறைந்தபட்ச அதிகாரத்தை கூட பயன்படுத்துவதில்லை. தேர்தல் காலங்களில் பார்வையாளர்களாக நியமிக்கப்படும் அதிகாரிகள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்க்கத்தான் வருகிறார்கள்.
முறைகேடுகளைக் கண்டறிந்து எங்கும் தேர்தலை நிறுத்தியதாகத் தெரியவில்லை. அவர்களது குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரியில் ரூ.70 லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்துக் கொடுத்தும் எந்தப் பயனுமில்லை. தேர்தல் ஆணையம் என்பது வேடிக்கை பார்க்கும் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது.
முறைகேடு நடப்பதால் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளின் இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும். வந்தவாசியில் பாமகவினர் திமுகவுக்கு ஆதரவாக வேலை பார்ப்பதாக வரும் செய்தி பொய்யானது.
கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க சிறந்த தீர்வாகும். தமிழக அரசு கடந்த 1974ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது முதல்வராக கருணாநிதி இருந்தார்.
தீர்மானம் கொண்டு வந்த அடுத்த இரு மாதங்களிலேயே கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது மத்திய அரசு. நமக்கு சொந்தமான நிலத்தை அடுத்த நாட்டுக்கு கொடுக்கும் போது கூட கருணாநிதி எந்தக் குரலும் கொடுக்கவில்லை. தமிழக மக்களை ஒன்றுதிரட்டி எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.
மேற்கு வங்கத்தின் சிறிய நிலப்பரப்பு அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசம்) தரப்பட்டபோது
அப்போது முதல்வராக இருந்த பி.சி.ராய், குடியரசு தினத்தன்று அவரது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றினார். சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தார். ஆனால் முதல்வராக இருந்த கருணாநிதி எதையும் செய்யவில்லை.
இந்தியாவின் இலங்கை வெளியுறவு கொள்கையால் சீனா மூலம் தென் தமிழகம் வழியாக ஆபத்து ஏற்படவுள்ளது. இலங்கையில் தனி ஈழம் அமைத்தால் மட்டுமே இதிலிருந்து இந்தியா தப்ப முடியும்.
கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால், தமிழ் வளர்ச்சிக்காக எதையும் சாதித்துவிடப் போவதில்லை.
கிராமங்களில் கூட சிறுவர்கள் தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசுகிறார்கள். இன்னும் 10 வருடங்களில் தமிழ் மொழி கலப்பு மொழியாகிவிடும். காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறித்து அவர்கள் தொழிலே செய்ய முடியாத நிலையை இலங்கை அரசு செய்துவருகிறது. இதுவரை 500 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய-மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும்.
கேரள மீனவர் ஒருவர் தாக்கப்பட்டு இருந்தால் இந்திய அரசு இலங்கையுடன் யுத்தமே நடத்தி இருக்கும்.
அமெரிக்காவைபோல இந்தியாவில் சிறிய மாநிலங்களை உருவாக்கினால் நாடு வேகமாக வளர்ச்சி அடையும். தெலுங்கானா, விதர்பா மாநிலங்களை உருவாக்குவது மிகவும் அவசியமானதாகும். உத்தரப் பிரதேசத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமிழகத்தை 2 ஆக பிரித்தால் நல்லது.
ஆந்திராவில் உள்ள சித்தூர், தேவிகுளம் பெருமேடு, பெங்களூரு போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
Wednesday, December 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
No comments:
Post a Comment